திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

லாலாப்பேட்டை அருகே  வாய்க்காலில் மணல் அள்ளிய 4 பேர் கைது: லாரி பறிமுதல்

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே வேங்காம்பட்டி பகுதியில் புங்காறு ஆற்று வாரி செல்கிறது. இந்த ஆற்றின் வாய்க்காலில் வியாழக்கிழமை இரவு டிப்பர் லாரியில் சிலர் மணல் அள்ளுவதாக லாலாப்பேட்டை

Updated On :14 மார்ச் 2014, 11:14 am

லாலாப்பேட்டை அருகே வாய்க்காலில் மணல் அள்ளிய 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே வேங்காம்பட்டி பகுதியில் புங்காறு ஆற்று வாரி செல்கிறது. இந்த ஆற்றின் வாய்க்காலில் வியாழக்கிழமை இரவு டிப்பர் லாரியில் சிலர் மணல் அள்ளுவதாக லாலாப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸôருடன் சென்று அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிய குளித்தலை கோடங்கிபட்டியைச்சேர்ந்த சதீஸ்குமார்(28), சத்தியமங்கலம் சரவணன்(30), கணக்கப்பிள்ளையூரின் மணிகண்டன்(22), ரமேஷ்(17) ஆகியோரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.